ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் |
காவிரி விவகாரத்தில், கர்நாடக முதல்வர் குமாரசாமியை, நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல், நேரில் சந்தித்து பேசினார். இதற்காக, விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கமலுக்கு வீரவாள், ஏர் கலப்பையை பரிசாக வழங்கினர்.
கமல் பேசியதாவது, விவசாயிகளுக்கு நன்றி கடனை தீர்க்கவே கர்நாடகா சென்றேன். இருமாநில விவசாயிகள் கூடி பேசினால், அரசியல்வாதிகள் யாரும் உள்ளே நுழைய முடியாது. நான் யார் என கேட்கிறார்கள்? நான், ஆயிரத்தில் ஒருவன் அல்ல, ஏழரை கோடியில் ஒருவன்.
'காலா' படத்திற்கு தடை என, அறிவித்து விட்டனர். 'விஸ்வரூபம் 2' படத்திற்கும் தடை என, கூறியுள்ளனர். விவசாய பிரச்னையை பேசி தீர்ப்பது போல, அதையும் வியாபாரிகள் பேசித் தீர்ப்பர். நல்லது செய்ய, யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு வயது தடையில்லை.
எனக்கு வீரவாள் கொடுத்தனர்; அது, அறுவடைக்கு பயன்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.