சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன்-7-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற அப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட ரஜினி, நேற்றுமுன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்ற காலா படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது தெலுங்கு திரைப்படத்துறையுடன் தனது தொடர்புகளை நினைவுபடுத்திய ரஜினிகாந்த், அதன்பிறகு காலா படம் குறித்து பேசினார்.
காலா படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் தனது வர்த்தக முத்திரை பாணியில் இந்த படத்தை எடுத்துள்ளார். மேலும், வணிக ரீதியில் கலையுணர்வுடன் எடுக்கப்பட்டுள்ள காலா படத்தில் ஒரு முக்கியமான சமூக செய்தி உள்ளது.
ஆசியாவிலுள்ள மிகப்பெரிய சேரி, மும்பையிலுள்ள தாராவி பகுதியாகும். அங்கு வாழும் மக்களின் நிலையை இந்த படம் விளக்குகிறது.
இவ்வாறு காலா படம் குறித்து ரஜினி பேசியுள்ளார்.