துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டுள்ள சமந்தா சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், அவர் நாகசைதன்யாவை காதலிப்பதற்கு முன்பு, பாய்ஸ் சித்தார்த்தை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. பின்னர் அந்த காதல் முறிந்து போனதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தனக்கு திருமணமான நிலையில், தனது பழைய காதலைப்பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் சமந்தா.
அதுகுறித்து அவர் கூறுகையில், மகாநதி படத்தில் நடித்து வந்தபோது, அந்த படத்தின் கதை என் வாழ்க்கையில் நடந்தது போலவே உணர்ந்தேன். அதாவது நானும் ஒரு நடிகரை கண்மூடித்தனமாக காதலித்தேன். பின்னர் அவரை விட்டு பிரிந்து விட்டேன். அப்படி பிரியவில்லையென்றால் என் வாழ்க்கையும் சாவித்ரி வாழ்க்கை போலாகியிருக்கும். எனது நல்ல நேரம்தான் நாக சைதன்யாவை சந்தித்தேன் என்று அந்த பேட்டியில் சமந்தா தெரிவித்துள்ளார்.
ஆனால் தான் முதலில் காதலித்த அந்த நடிகர் யார் என்பதை சமந்தா வெளிப்படையாக சொல்லாததால், அவரது இணைய பக்கத்தை தொடர்பு கொண்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.