Advertisement

சிறப்புச்செய்திகள்

கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சவரக்கத்தி போஸ்டரில் இயக்குனரைவிட முக்கியத்தும் ஏன்?: மிஷ்கின் விளக்கம்

23 ஜன, 2018 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Director-Mysskin-reply-why-his-name-important-in-poster
Advertisement

மிஷ்கின் தயாரித்து, நடித்துள்ள படம் சவரக்கத்தி. அவரே கதை திரைக்கதை வசனமும் எழுதியுள்ளார். அவரது தம்பி சி.ஆர்.ஆதித்யா இயக்கி உள்ளார். ராம், பூர்ணா, அஷ்வத், மோகன் ஆதேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் விளம்பரங்களில் மிஷ்கினின் சவரக்கத்தி என்றும், கதை திரைக்கதை, தயாரிப்பு மிஷ்கின் என்றும் பெரிய எழுத்துக்களில் போட்டுவிட்டு, இயக்குனர் ஆதித்யாவின் பெயரை சின்னதாக போட்டுள்ளனர். நேற்று நடந்த படத்தின் அறிமுக விழாவில் இதுகுறித்து வருத்தப்பட்டு பேசினார் இயக்குனர் ஆதித்யா. "நான் அடுத்த படம் எடுத்தால் படத்துக்கு பெயரையே "ஆதித்யா படம்" என்று வைப்பேன்" என்றார் இதற்கு பதிலளித்து மிஷ்கின் பேசியதாவது:

நான் என்னுடைய தம்பியும், இயக்குனருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விட பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள் தான் காரணம். என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால் தான் அப்படி போட்டிருக்கிருக்கார்கள். எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாக போடுவது பிடிக்காது. நான் இறந்த பிறகு ஐம்பது வருடம் கழித்து என்னை பற்றியும், நான் எடுத்த படம் இது என்றும் எல்லோரும் பேசினால் போதும்.

எனக்கு சவரகத்தி படத்தின் மூலம் எந்த லாபமும் இல்லை. எனக்கு எந்த லாபமும் வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த படம் வெற்றி பெற்றால் அதற்கு 90 சதவிகித காரணம் பூர்ணா. பத்து சதவிகிதம் ராம். வெற்றியை நான் பூர்ணாவுக்கு சமர்பிக்கிறேன். வெற்றி பெற்ற அன்றே சவரக்கத்தி இரண்டாம் பாகம் கதை அறிவிப்பேன். அவ்வளவு கதைகள் கைவசம் இருக்கிறது. என்றார் மிஷ்கின்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in