ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாகுபலி படத்தில் அவந்திகா என்ற புரட்சி பெண்ணாக நடித்த தமன்னா, அதன்பிறகு தன்னைத்தேடி அழுத்தமான வேடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எந்த நிகழ்வும் நடக்கவில்லை. ஆனால், நான் எதிர்பார்த்தது இந்த 2018-ம் ஆண்டில்தான் நடக்கப்போகிறது என்கிறார் தமன்னா.
அதுகுறித்து தமன்னா விடுத்துள்ள செய்தியில், ஸ்கெட்ச் படத்திற்கு பிறகு தமிழில் சீனுராமசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் குயின் ரீமேக் மற்றும் இரண்டு படங்களிலும், இந்தியில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். அந்த வகையில், தற்போது என் கைவசம் ஐந்து படங்கள் உள்ளன.
அதோடு, இந்த படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அழுத்தமான வேடங்களில் நடிக்கிறேன். காரணம், இதுவரை நடிகர்களை மட்டுமே மனதில் கொண்டு கதை எழுதி வந்த நிலை மாறி, நடிகைகளை மனதில் கொண்டு கதை எழுதும் காலம் இப்போது உருவாகியிருக்கிறது. அதனால், கதை எழுதும்போதே ஹீரோயினிகளின் கேரக்டருக்கும் அழுத்தமான காட்சிகளை உருவாக்குகிறார்கள் டைரக்டர்கள். இப்போது நான் நடிக் கும் அனைத்து படங்களிலுமே நானே எதிர்பார்க்காத வெயிட்டான வேடங்களாக கொடுத்திருக்கிறார்கள். அதனால் 2018-ம் ஆண்டில் நான் நடிக்கும் படங்கள் என்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படங்களாக அமைந்துள்ளன என்கிறார் தமன்னா.