ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் |
'நடிக்க வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது; 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால், இதில், எனக்கு மன நிறைவை தந்த படம் என்றால், பர்பி உள்ளிட்ட ஒருசில படங்களை மட்டுமே கூற முடியும்' என, விரக்தியுடன் பேசுகிறார், இலியானா.
துவக்கத்தில், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், சமீபகாலமாகத் தான், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதுவரையிலான, தன் திரையுலக பயணங்கள் குறித்து, மனம் திறந்து பேசிய அவர், 'கதை, அதில் எனக்குள்ள முக்கியத்துவம் போன்ற எதையுமே கேட்காமல், தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க சம்மதித்தேன்; இப்போது, அதையெல்லாம் யோசித்துப் பார்த்தால், குழந்தை தனத்துடன் நடந்து கொண்டதாகவே தெரிகிறது; இனிமேல், எனக்கும், என் நடிப்புக்கும் முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க சம்மதிக்க மாட்டேன்.
'ஒரு படத்தில் நடித்தாலும், நல்ல படத்தில் மட்டுமே நடிப்பேன்' என்கிறார், இலியானா.