பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ |
கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலி முருகன்' படத்தை தயாரித்தவர் தோமிச்சன் முலக்குப்பாடம்.. கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த வருடம் ஜூன் மாதம் வரை அவரைப்போல சந்தோஷமான தயாரிப்பாளர் வேறு ஒருவரை பார்க்க முடிந்திருக்காது. அந்த அளவுக்கு 'புலி முருகன்' படத்தின் பிரமாண்ட வெற்றியாலும், அபரிமிதமான வசூலாலும் குஷியாக இருந்த தோமிச்சன், சூட்டோடு சூடாக நடிகர் திலீப்பை வைத்து சுமார் பதினான்கு கோடியில் 'ராம்லீலா' என்கிற படத்தை தயாரித்திருந்தார்.
அதன்பின் நடிகை விவகாரத்தில் திலீப் கைதாகி, அவரது இமேஜ் மொத்தமாக டேமேஜ் ஆனதால், இப்போதுவரை ராம்லீலா படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கிறார் தோமிச்சன். பதினான்கு கோடி ரூபாயும் மொத்தமாக முடங்கிவிட்ட இந்தநிலையில் தான், அஜித்தின் 'விவேகம்' பட கேரள உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளார் தோமிச்சன். சுமார் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நாளை (ஆக-24) கேரளாவில் விவேகம் வெளியாகிறது.. இந்தப்படத்தின் வெற்றியும் லாபமும், 'ராம்லீலா'வால் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருந்து போடும் என எதிர்பார்க்கலாம்..