ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' |
பிக்பாஸ் வீட்டில் பல நேரங்களில் எதிரும் புதிருமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும், திட்டிக் கொண்டாலும் அடிப்படையில் அன்பாக ஒருவர் மீது ஒருவர் அக்கறையாக இருந்து வந்தவர்கள் ஷக்தியும், காயத்ரியும். இதற்கு ஒரு அடிப்படை காரணம் உண்டு. காயத்ரியின் தந்தை ரகுமராம் மாஸ்டரும், ஷக்தியின் தாத்தா பீதாம்பரமும் நெருங்கிய நண்பர்கள். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமராவ் படங்களில் தொடர்ச்சியாக ரகுராம் டான்ஸ் மாஸ்டராகவும், பீதாம்பரம் மேக்அப் மேனாகவும் பணியாற்றி வந்தார்கள். இருவம் குடும்ப நண்பர்களாக இருந்தார்கள். இந்த குடும்ப உறவு பிக்பாஸ் வீட்டிலும் இருந்தது.
ஷக்தி வெளியேறியபோது காயத்ரி கதறி அழுதது இதைத்தான் காட்டியது. ஷக்தி வெளியேறிய பிறகு காயத்திரி தான் தனிமையில் இருப்பதை போன்று உணர்கிறார். ரெய்சா மீது கடும் கோபத்தை காட்டுகிறார். தனியாக புலம்பிக் கொண்டு திரிகிறார். அடுத்த வாரம் நான் வெளியேறிவிடுவேன் என்றும் காயத்ரி சொல்லிக் கொண்டு பிக்பாஸில் புலம்பியபடி தவித்து வருகிறார். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.