ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் |
டி.ராஜேந்தர் கடைசியாக இயக்கிய படம் வீராச்சாமி. அதன் பிறகு கிராமத்து காதலை மையமாக கொண்டு ஒரு தலை காதல் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டது. இந்த நிலையில் டி.ராஜேந்தர் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் மலேசியாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரின் மகன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினை ஆடிசன் வைத்து தேர்வு செய்து முடித்துள்ளார். வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், என சகலமும் அவர் தான். ஒளிப்பதிவை மட்டும் இன்னொருவர் கவனிக்கிறார். டி.ராஜேந்தரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தக்கால டிரண்டுக்கு ஏற்ற மாதிரி சஸ்பென்ஸ் திரில்லர் படம். படப்பிடிப்பில் 50 சதவிகிதம் மலேசியாவிலும், மீதி 50 சதவிகிதம் ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கிறது. காணாமல் போன தன் காதலியை தேடி பயணிக்கும் ஒருவனது கதை என்கிறார்கள். கவன் படத்திற்கு பிறகு நடிப்பிலும் பிசியாகி விட்டார் டி.ராஜேந்தர். பேரரசு இயக்கும் படத்தில் விஷாலுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.