பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சர்ச்சைக்குரிய டேம் 999 ஆங்கிலத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்று சித்தரிக்கப்பட்ட ஆங்கில திரைப்படமான டேம் 999 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு தமிழ் ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அந்த திரைப்படத்தை திரையிட நவம்பர் 24ம்தேதி தமிழக அரசு தடை விதித்தது. முதலில் 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரைப்படத்தின் இயக்குநர் சோஹன்ராய் தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், திரைப்படத்திற்கான தடையை ஏன் நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விளக்க மளிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை சென்னை வந்து தலைமை செயலகத்தில் உள்துறை செயலரை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் திரைப்படத்திற்கான தடையை தமிழக அரசு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்த தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள சோஹன்ராய், நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை, என்று கூறியுள்ளார்.