மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! |
சில வருடங்களுக்கு முன்புவரை முன்னணி இயக்குநராக இருந்த கே.எஸ்.ரவிகுமார் கடந்த சில வருடங்களாக பின்னடைவை சந்தித்து வருகிறார். ரஜினியை வைத்து இயக்கிய லிங்கா படத்தின் தோல்வி அவரை சற்று அப்செட்டாக்கிவிட்டது. எனவே நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தவர், கடைசியாக இயக்கிய படம் 'முடிஞ்சா இவனப்புடி'.
கன்னட நடிகர் சுதீப் கதாநாயகனாக நடித்த இப்படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டது. அதை தமிழில் டப் செய்து நேரடி படம் போல் வெளியிட்டனர். அப்படியும் முடிஞ்சா இவனப்புடி படம் வெற்றியடையவில்லை. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.
இது பாலாகிருஷ்ணா நடிக்கும் 102-வது படம். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது! இதற்காக கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் முகாமிட்டிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.