ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

மறைந்த நடிகர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் ராதா. சமீபத்தில் இவருக்கு எதிராக சென்னையைச்சேர்ந்த உமாதேவி என்ற பெண், எனது கணவர் முனிவேலை, நடிகை ராதா என்னிடமிருந்து பிரிக்க முயற்சிக்கிறார். அதனால் எனது கணவரை ராதாவிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என்று மாம்பலம் மகளிர் காவல் நிலையத்திலும், விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும புகார் மனு அளித்திருந்தார். அதையடுத்து, நடிகை ராதாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். அதன்பிறகும் நடிகை ராதா தனது கணவருடன் போனில் பேசுவதாகவும், அவர் தனக்கு மிரட்டல் விடுப்ப தாகவும் உமாதேவி காவல் நிலையத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று வைரம் என்கிற ரவுடி, வாட்ஸ் அப்பில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு புகாரை காவல் நிலையத்தில் வாய்ஸ்சுடன் அளித்துள்ளார் நடிகை ராதா. அதில், முனிவேலை விட்டு பிரியுமாறு ஒரு ஆண் குரல் எச்சரிக்கை விடுப்பது போல் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இதை யடுத்து, அவர் குறிப்பிட்டுள்ள ரவுடி வைரம் என்பவரின் மனைவியான லீலா, என் கணவர் புழல் சிறையில் இருக்கிறார். அவரால் எப்படி ராதாவிடம் போனில் பேச முடியும். இந்த விசயத்தில் தேவையே இல்லாமல் என் கணவர் மீது நடிகை ராதா புகார் சொல்கிறார் என்று தனது சார்பில் ஒரு புகாரை அளித்திருக்கிறார்.
ஆக, நடிகை ராதா விவகாரம் தற்போது பல அடுக்கு பிரச்சினைகளாக உருவெடுத்து விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருக்கிறது.




