என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மறைந்த நடிகர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் ராதா. சமீபத்தில் இவருக்கு எதிராக சென்னையைச்சேர்ந்த உமாதேவி என்ற பெண், எனது கணவர் முனிவேலை, நடிகை ராதா என்னிடமிருந்து பிரிக்க முயற்சிக்கிறார். அதனால் எனது கணவரை ராதாவிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என்று மாம்பலம் மகளிர் காவல் நிலையத்திலும், விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும புகார் மனு அளித்திருந்தார். அதையடுத்து, நடிகை ராதாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். அதன்பிறகும் நடிகை ராதா தனது கணவருடன் போனில் பேசுவதாகவும், அவர் தனக்கு மிரட்டல் விடுப்ப தாகவும் உமாதேவி காவல் நிலையத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று வைரம் என்கிற ரவுடி, வாட்ஸ் அப்பில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு புகாரை காவல் நிலையத்தில் வாய்ஸ்சுடன் அளித்துள்ளார் நடிகை ராதா. அதில், முனிவேலை விட்டு பிரியுமாறு ஒரு ஆண் குரல் எச்சரிக்கை விடுப்பது போல் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இதை யடுத்து, அவர் குறிப்பிட்டுள்ள ரவுடி வைரம் என்பவரின் மனைவியான லீலா, என் கணவர் புழல் சிறையில் இருக்கிறார். அவரால் எப்படி ராதாவிடம் போனில் பேச முடியும். இந்த விசயத்தில் தேவையே இல்லாமல் என் கணவர் மீது நடிகை ராதா புகார் சொல்கிறார் என்று தனது சார்பில் ஒரு புகாரை அளித்திருக்கிறார்.
ஆக, நடிகை ராதா விவகாரம் தற்போது பல அடுக்கு பிரச்சினைகளாக உருவெடுத்து விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருக்கிறது.