புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
நடிகர் விக்ரம் மகளின் காணாமல் போன மோதிரம் கிடைத்துவிட்டது. அதை கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் போலீஸில் பத்திரமாக ஒப்படைத்தார்.
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா, இவருக்கும் மு.க.முத்துவின் பேரனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கடந்த வாரம் இவர்கள் இருவரும் ஆயிரம்விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றுக்கு வந்த போது அக்ஷிதா கையிலிருந்த மோதிரம் காணாமல் போனது. பின்னர் இது பற்றி ஆயிரம்விளக்கு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் காணாமல் போன விக்ரம் மகளின் மோதிரத்தை கண்டெடுத்த கால் டாக்சி டிரைவர் ஒருவர் பேப்பரில் விக்ரம் மகள் மோதிரம் காணாமல் போனதை அறிந்து, உடனடியாக விக்ரம் வீட்டிலேயே அதை அளித்துள்ளார். போலீசார் கவனத்துக்கே செல்லாமல் இந்த மோதிரத்தை அவர்களிடம் அளித்துள்ளார். லட்சுமணன் என்ற அந்த கால் டாக்சி டிரைவரின் நேர்மையை பலரும் பாரட்டி வருகின்றனர்.
நிச்சயதார்த்த மோதிரம் என்பதால் அதன் உண்மையான மதிப்பை விட செண்டிமெண்டாக கூடுதல் மதிப்பு கொண்ட மோதிரத்தை கண்டுபிடித்து கொடுத்த கால்டாக்சி டிரைவருக்கு விக்ரம் என்ன கைமாறு செய்ய போகிறார் என்பது தெரியவில்லை.