ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் |
மகாகவி பாரதியாரின் எள்ளுபேரன் நிரஞ்சன் பாரதி. கவிஞரான இவர் சிட்டுக்குருவிகளின் அழிவை தடுக்கவும், அவற்றை பாதுகாக்கவும் பாடல் ஒன்று உருவாக்கியுள்ளார். இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது...
சமீப காலமாக மாநகரங்களில் சிட்டுக்குருவிகள் அருகி வருவதைப் பார்க்கிறோம். இதற்கு செல்ஃபோன் கதிர்வீச்சு, ரசாயன உரங்கள் பயன்பாடு, பெருகி வரும் கான் கிரீட் குடியிருப்புகள் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் இதைப் பற்றிய ஒரு அறிதலோ புரிதலோ பல பேரிடம் இல்லை என்பது தான்.
எனவே, இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கில் நானும் என் நண்பர் கார்த்திக் ரவீந்தரும் இணைந்து சிட்டுக்குருவிக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளோம்.
“தத்தித் தத்தி நடப்பாயே சிட்டுக்குருவி நீ வெகுதூரம் போனதென்ன சிட்டுக்குருவி” என்று இந்தப் பாடல் தொடங்கும். இந்த பாடலுக்கான வரிகளை நான் எழுத கார்த்திக் ரவீந்தர் வெகு அழகாக அதற்கு மெட்டமைத்தார். இந்த மெலடி பாடலை கீர்த்தனா வைத்தியநாதன் என்பவர் பாடியுள்ளார். இந்தப் பாடல் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
இனி வரும் காலங்களில் யானை - மனிதர்கள் மோதல், வேட்டையாடப்படும் புலிகள், ரசாயன உரங்களால் அழியும் தேனீக்கள் உள்ளிட்ட பிரச்னைகளை மையமாகக் கொண்டு பாடல்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.