பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, "பார்த்தோம் பழகினோம்" என்ற புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். டைரக்டர் ராசு.மதுரவன் இயக்கும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமை பொங்க நண்பர்களிடம் கூறி வருகிறார் மயில்சாமி. ராசு.மதுரவன் என்றாலே குடும்ப செண்டிமென்ட், அழுகாச்சி என்றுதான் படம் முழுக்க இருக்கும். அந்த செண்டிமென்ட் காட்சிகளையெல்லாம் தவிர்த்துவிட்டு காதலை சொல்லும் படமாக பார்த்தோம் பழகினோம் படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க தன் மகனுக்கு வாய்ப்பு கிடைத்தது பற்றி மயில்சாமி கூறுகையில், அஜீத் சார் ஒருமுறை அன்புவை பார்த்துவிட்டு, தம்பி அழகாயிருக்கார். நல்ல படமா தேர்ந்தெடுத்து நடிக்க வைங்க என்று சொன்னார். ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன் போன்ற முன்னணி இயக்குனர்களும் வாய்ப்பு கொடுப்பதாக சொல்லியிருக்காங்க. அந்த நேரத்தில்தான் ராசு.மதுரவன், என் மகனை பார்த்து, என் படத்தில் நடிக்க வைக்கலாமே என்று கேட்டார். நான் துண்டு துக்கடா கேரக்டர் பண்ணிட்டு இருக்கும்போதே எனக்கு வெயிட்டான ரோல் கொடுத்து நடிக்க வைத்தவர் அவர். அதனால் சட்டுன்னு சரி சொல்லிட்டேன், என்றார்.
லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அன்புவின் உண்மையான பெயர் அருமை சந்திரன். சினிமாவுக்காக அன்பு என பெயரை மாற்றியிருக்கும் தன் மகன், படிப்பிலும் படு சுட்டி என்று பெருமிதம் பேசுகிறார் மயில்சாமி.