ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எனக்கு 20 உனக்கு 18, மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், சிவாஜி என பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. பெரிய அளவில் பர்பாமென்ஸ் கொடுக்கவில்லை என்றபோதும் கிளாமர் ஏரியாவில் புகுந்து விளையாடினார். அந்த வகையில், எந்த டைரக்டரிடமும் கவர்ச்சி விசயத்தில் அவர் கட்டுப்பாடு விதித்ததில்லை. ஆனபோதும், வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் அயிட்டம் பாடலுக்கு ஆடியதால் அதன்பிறகு அவ ருக்கு எந்த ஹீரோக்களும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
இதனால் புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கிற்கு சென்று நடித்து வந்த ஸ்ரேயா, மனம் தெலுங்கு படத்தில் இருந்து கேரக்டர் நடிகையாகி விட்டார். முதிர்ச்சியான ஹீரோக்களுடன் நடிக்கவும் அவர் தயங்கவில்லை. இந்த நிலையில், சந்திரா படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காமல் இருந்து வந்த ஸ்ரேயா, தற்போது புதுமுகம் கிருஷ்ணா நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடுத்தர வயது பெண்ணாக ஒரு மெச்சூரிட்டியான வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் பற்றிய தகவல்களை தற்போது சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். இதையடுத்து, ஹீரோயினி என்கிற இமேஜில் இருந்து முழுமையாக விடுபட்டு வித்தியாசமான கேரக்டர் நடிகையாக உருவெடுக்கிறாராம் ஸ்ரேயா.