ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டோலிவுட்டில் நடிகர் மகேஷ் பாபு நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ஸ்ரீமந்துடு படத்தில் கிராமங்களை தத்தெடுத்து அவற்றிற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. அதனை நிஜத்தில் பின்பற்றும் விதமாக படத்தின் நாயகன் மகேஷ் பாபு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபேலம் எனும் தனது சொந்த கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அதே போல் நாயகி ஸ்ருதிஹாசனும் தமிழகத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுக்க பரிசீலனை செய்து வருகின்றாராம். திரைத்துறை தாண்டி பல சமூக சேவைகளை செய்து வரும் நடிகரும் ஸ்ருதிஹாசனின் தந்தையுமான கமலஹாசன் தான் தனது இந்த தத்தெடுக்கும் திட்டத்திற்கு காரணம் என்று ஸ்ருதி கூறியுள்ளார். தற்போது தமிழகத்தில் எந்த கிராமத்தை தத்தெடுப்பது என்ற தீவிர ஆலோசனையில் ஸ்ருதி ஈடுபட்டுள்ளாராம். எந்த கிராமத்தை தத்தெடுப்பது என்று முடிவு செய்தபின் அதற்கான அடுத்த கட்ட பணிகள் துவங்கப்படும் என்றும் ஸ்ருதி கூறியுள்ளார்.