நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு |
பொதுவாக சினிமா நடிகைகள் ஸ்பாட்டுக்கு வரும்போது நல்ல விதமாகத்தான் ஆடை அணிந்து உடம்பு முழுக்க கவர் பண்ணி வருவார்கள். அதையடுத்து, கேரக்டர்களுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள கொடுக்கப்படும் ஆடைகளை அணிந்து முழுமையாக மாறுவார்கள். அந்த வகையில் ஹோம்லியாகவோ, கிளாமராகவோ தோன்றுவார்கள். அந்த வகையில், அட்டகத்தி படத்தில் நடித்த நந்திதா அந்த படத்தின் ஆடிசனுக்கு வரும்போதே, துண்டு துக்கடா என்றுதான் அணிந்து வந்திருக்கிறார். ஆனால் கதைப்படி அவர் வில்லேஜ் பெண்ணாக மாற வேண்டும் என்பதால் அவரை பாவாடை தாவணிக்கு மாற்றியிருக்கிறார் டைரக்டர் ரஞ்சித். அந்த கெட்டப்பும் தனக்கு புதிய அனுபவமாக இருந்ததால் அப்போதைக்கு என்சாய் பண்ணிதான் நடித்திருக்கிறார் நந்திதா. ஆனால், அந்த படத்திற்கு பிறகு கிடைத்தது எல்லாமே அதுபோன்ற ஹோம்லியான வேடங்கள் என்பதால் இப்போது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டதாம். முக்கியமாக, கிராமத்து கதைகளாக நடிப்பதால் நந்திதாவின் படக்கூலியும் தரைமட்டத்திலேயே இருக்கிறதாம். இதனால் தனக்கு பிறகு நடிக்க வந்த நடிகைகளெல்லாம் ஓரிரு படத்தோடு பத்து, பதினைந்து என்று லட்சங்களை எண்ணிக்கொண்டு செல்ல தன்னால் ஐந்தாறு லட்சங்களைகூட தாண்ட முடியவில்லையே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார்.
அதனால், இதை இப்படியே விட்டால் சரியில்லை என்று ஏற்கனவே படப்பிடிப்பு தளங்களுக்கு வந்ததை விடவும் இப்போது படுகவர்ச்சியாக வந்து டைரக்டர்களை கிறங்கடிக்கிறாராம் நந்திதா. அதோடு, எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என்னாலும் ஹன்சிகா, தமன்னா போன்று கவர்ச்சி ஹீரோயினாக ஜொலிக்க முடியும் என்றும் வாய்ப்பு கேட்கத் தொடங்கியிருக்கிறார். ஆக, அட்டகத்தி நந்திதாவின் கவர்ச்சி அட்டகாசத்தை தமிழக ரசிகர்கள் கண்டுகளிக்கும் தருணம் நெருங்கிவிட்டது என்றே தெரிகிறது.