ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், ஏழாம் அறிவு, 3, பூஜை படங்களுக்குப்பிறகு புலியில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக அஜீத்தின் புதிய படத்திலும் நடிக்கிறார். இதேபோல், இந்தியிலும் மூன்று மெகா படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ஸ்ருதிஹாசன் நடித்த இந்தி படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படங்களில் அவர் அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், தற்போது நடித்து வரும் வெல்கம் பேக், யாரா, ராக்கி ஹாட்சம் ஆகிய படங்களில் இன்னும் அதிரடியான நடிப்பை வெளிபடுத்தி வருகிறாராம.
அதனால் நடித்து வரும் இந்தி படங்கள் வெளியாகும்போது ஸ்ருதிஹாசன் இன்னும் பரபரப்பான நடிகையாகி, இன்னும் பெரிய மார்க்கெட்டை பிடித்து விடுவார் என்று கூறப்படுகிறது. அதன்காரணமாக, தற்போது மேலும் சில இந்தி இயக்குனர்கள் ஸ்ருதியிடம் கதை சொல்லி வருகிறார்களாம். அதோடு, மற்ற மொழிகளை குறைத்து விட்டு இந்தி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறும் ஸ்ருதியை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். அதனால் இப்போது நடித்துள்ள படங்கள் எதிர்பார்த்தபடி ஹிட்டடித்தால் அடுத்து ஸ்ருதியின் கவனம் இந்தி பக்கம் அதிகமாக திரும்பி விடும் என்று தெரிகிறது.