ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
ஆர்ப்பாட்டமான ஹிட் இல்லை என்றாலும், விக்ரம் பிரபு நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியாகத்தான் அமைந்தன. அந்த வகையில், கும்கி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்காரதுரை படங்களைத் தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்துள்ள அவர், அடுத்தபடியாக வாஹா என்ற படத்தில் நடிக்கிறார். மேலும், சிவாஜிகணேசனின் பேரன், பிரபுவின் மகன் என்கிற பெரிய பின்னணி இருந்தபோதும், படப்பிடிப்பு தளங்களில் எந்தவித பந்தாவும் செய்யாமல், ரொம்ப எளிமையாக காணப்படும் விக்ரம்பிரபு, தனக்கென டிரைவர்கூட வைத்துக்கொள்ளாமல் தானே கார் ஓட்டியும் வருகிறார். அதோடு, பெரிய இடத்து நடிகர் என்று யாராவது அவரை நெருங்க தயங்கி நின்றால், இவரே அவர்களை அழைத்து சகஜமாக பேசிப்பழகுகிறாராம். குறிப்பாக, சிலரைப்போன்று ஸ்பாட்டுக்கு வந்த வேகத்திலேயே கேரவனுக்குள் சென்று பதுங்கிக்கொள்ளாமல், சக நடிகர் நடிகைகளிடம் பேசி நட்பு வளர்க்கிறார் விக்ரம்பிரபு. அவரது இந்த எளிமையான நடவடிக்கை காரணமாக சினிமா வட்டாரத்தில் தற்போது அவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள் உருவாகி விட்டனர்.