ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
ஜாம்பவான் இயக்குநரான மணிரத்னம் கிங் நாகார்ஜூன், பிரின்ஸ் மகேஷ் பாபு, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அழகு நடிகையான ஸ்ருதி ஹாசன் ஆகியோரை வைத்து தமிழ்-தெலுங்கு மொழி படத்தை எடுக்க இருக்கிறாராம். இந்த புதிய படத்தை பற்றிய அறிவிப்பு நீண்ட நாளுக்கு முன்பே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா ராய் தனது தனிப்பட்ட வேலைகளுக்காகவும். இயக்குனர் மணிரத்னம் ஓகே கண்மணி என்ற படத்திற்காக பிஸியாக இருந்தார். இந்நிலையில் இந்த புதிய படம் பற்றி ஐஸ்வர்யா ராய் கூறும்போது, நான் சினிமாவில் அறிமுகமானதே இயக்குனர் மணி சாரின் இருவர் (இட்டரு) படம் மூலம் தான். நான் தற்போது ஒரு இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படத்தையும் மணி சார் இயக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அது வெகு விரைவில் நடக்கும் என்றார். இந்த தமிழ்-தெலுங்கு படத்தில் நாகார்ஜுனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், மகேஷ் பாபுவுக்கு ஸ்ருதி ஹாசன் ஜோடியாகயும் நடிக்க இருப்பதாக தெரிகிறது.