ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கோச்சடையான் படத்திற்கு பின்னர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரண்டு வேடத்தில் நடித்து வௌியான படம் லிங்கா. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் இப்படத்தை வாங்கி வௌியிட்ட விநியோகஸ்தர்கள் போர் கொடி தூக்கினர். ரஜினி வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை முன் வைத்தனர். இறுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டு, சில கோடிகள் நஷ்ட ஈட்டு தொகையாக வழங்கப்பட்டது. இதை விநியோகஸ்தர்கள் பங்கீட்டு கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
மீண்டும் போர்கொடி
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் சில விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சிலர், தங்களுக்கு சொன்னபடி நஷ்ட ஈட்டு தொகை வழங்கப்படவில்லை என்று மீண்டும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.
இதுதொடர்பாக, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, சேலம், திருநெல்வேலி, திருச்சி, கோவை ஏரியா வினியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில்...
லிங்கா நஷ்டம் தொடர்பாக ரஜினி சார்பில் ரூ.12.50 கோடி தர முடிவு செய்யப்பட்டது. நாங்களும் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் சொன்னபடி பணத்தை இதுவரை தரவில்லை. இதுவரை ரூ.5.89 கோடி தான் நஷ்டஈட்டு தொகை கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.6.61 கோடி இன்று வரை கொடுக்கப்படவில்லை. பணத்தை தாணுவிடம் கேட்டால் திருப்பூர் சுப்ரமணியத்திடம் இருக்கிறது என்கிறார். சுப்ரமணியத்திடம் கேட்டால் மதுரை அன்புவிடம் இருக்கிறது என்றார். ஒரு கட்டத்தில் பணமெல்லாம் இல்லை என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம். இந்த விஷயத்தில் நாங்கள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டுள்ளோம்.
ரஜினிக்கு ஒரு வாரம் கெடு
எம்.ஜி. அடிப்படையில் திரையிட்ட தியேட்டர்காரர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி, வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு கொடுத்த வாக்குறுதிப்படி கால்ஷீட் தர வேண்டும். இல்லையெனில் ரூ.15 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும். இன்னும் ஒருவார காலத்திற்குள் ரஜினி இதுப்பற்றி முடிவு எடுக்க வேண்டும், இல்லையெனில் அடுத்தகட்ட போராட்டத்தை நாங்கள் துவக்குவோம் என்றனர்.