துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் |
மலேசியாவைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் முத்துக்குமார் வாண்டட். சரண், நிஷிரா ஹீரோ, ஹீராயினாக நடித்துள்ளனர், சுந்தரா இசை அமைத்துள்ளார், எம்.ஜி.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், எம்.பத்மநாபன் இயக்கியுள்ளார். முனியாண்டி கேசவன், வேல் சரவணன் தயாரித்துள்ளனர். அனைவருமே மலேசியாவைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, பாத்திமாபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட தமிழ்நாட்டு கலைஞர்களும் பணியாற்றி உள்ளனர்.
"சென்னையில் பெற்றோருடன் வசித்துவரும் ஆனந்திக்கு சிறுவயது முதல் முத்துக்குமார் என்ற பெயரில் பல பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கிறது. முத்துக்குமார் யார் என்று தெரியாதபோதிலும் மகிழ்ச்சியுடன் அந்த பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்கிறாள் ஆனந்தி. முத்துக்குமாரை பல முறை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் வளர்ந்து ஆளான ஆனந்திக்கு நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அன்றையதினம் ஒரு பரிசுப்பெட்டியை அனுப்பிய முத்துக்குமார் அதனுள் விலை உயர்ந்த பரிசு பொருள் இருப்பதாகவும், அதனுடைய சாவி தன்னிடம் இருப்பதாகவும், தான் மலேசியா செல்லவிருப்பதால் ஏர்போர்ட் வந்து சாவியை பெற்றுக்கொள்ளும்படி ஒரு கடிதத்தையும் இணைத்துள்ளார். அப்படி ஏர்பபோர்ட் வரத்தவறினால் மலேசியா வந்து பெற்றுக்கொள்ளவும் என்று கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
ஆனந்தி ஏர்போர்ட் செல்கிறாள். ஆனால் அதற்கு முன்பே முத்துக்குமார் மலேசியா சென்று விடுகிறான். திருமணத்திற்கு ஐந்து நாட்கள் உள்ள நிலையில் தந்தையின் அனுமதி பெற்று முத்துக்குமாரைத் தேடி மலேசியா செல்கிறாள் ஆனந்தி, அங்கு அவளுக்கு ஏற்படும் சுவையான சம்பவங்களையும், அவள் முத்துக்குமாரை சந்தித்தாளா ? அந்த பெட்டகத்தின் சாவியை பெற்றுக்கொண்டாளா என்பதையும் நகைக்சுவை கலந்து சொல்லும் படம்" என்கிறார் இயக்குனர் பத்மநாபன்.