Advertisement

சிறப்புச்செய்திகள்

ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாபி சிம்ஹாவின் சகோதரி ஹீரோயின் ஆனார்!

20 மே, 2015 - 01:04 IST
எழுத்தின் அளவு:
Bobby-Simhas-sister-becomes-heroine-in-Masala-Padam

நேரம், சூதுகவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் பாபி சிம்ஹா. நடித்த சில படங்களிலேயே சிறந்த நடிப்புக்காக, ஜிகர்தண்டா படத்திற்காக இந்தாண்டு தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள பாபி பல படங்களில் நடித்து வருகிறார்.


இப்போது அவரது குடும்பத்திலிருந்து இன்னொரு வாரிசு சினிமாவில் களமிறங்கியுள்ளது. அவர் பெயர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் பாபியின் சகோதரி ஆவார். உறவினர் வழியில் பாபி, இவருக்கு சகோதரி. அதுமட்டுமல்ல ரேஷ்மாவின் குடும்பமும் சினிமா பின்னணி உடையது தான். ரேஷ்மா தாத்தா, அப்பா ஆகியோர் தயாரிப்பாளர்களாக இருந்துள்ளார்கள். இதயத்தை திருடாதே, போன்ற பல படங்களை தயாரித்துள்ளார் ரேஷ்மாவின் அப்பாவும், தயாரிப்பாளருமான பி.ஆர்.பிரசாத்.


தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு அனைத்தையும் அமெரிக்காவில் முடித்து விட்டு, ஒன்றரை ஆண்டுகள் சர்வதேச விமானங்களில் ஏர்ஹோஸ்டராகவும் பணியாற்றியுள்ளார் ரேஷ்மா. பிறகு சென்னை வந்த ரேஷ்மா, ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பின்னர், வம்சம், வாணி ராணி போன்ற தொடர்களில் நடித்தார். அதிலும் வம்சம் தொடரில் டாக்டர் சுப்ரியா கேரக்டர் பண்ணியவர் இவர் தான். அதனால் இவருக்கு சுப்ரியா என்ற பெயரே பிரபலமானது.


ரேஷ்மா இப்போது அடுத்தகட்டத்தை நோக்கி பயணித்திருக்கிறார். அதாவது சின்னத்திரையிலிருந்து, வௌ்ளிதிரைக்கு உயர்ந்துள்ளார். புதியவர் லக்ஷ்மன் குமார் இயக்கத்தில், தனது சகோதரர் பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா ஆகியோர் நடித்து வரும் ''மசாலா படம்'' என்ற படத்தில் மூன்றாவது ஹீரோயினாக நடித்து வருகிறார்.


ஹீரோயினாக நடிப்பது பற்றி ரேஷ்மா கூறியதாவது, தமிழில் நான் நடிக்கும் முதல் படம் ''மசாலா படம்''. இந்தப்படம் மிகவும் வித்தியாசமானது. காதல், காமெடி, ஆக்ஷ்ன் என மூன்று விதமான கதையில் இப்படம் பயணிக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் ஒரே படத்தில் மூன்று விதமான கதைகளில் உருவாகிறது. இதில் ரொமான்ஸ் போர்ஷனில் நான் நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக கௌரவ் என்பவர் நடிக்கிறார். மசாலா படம் தவிர, மலையாளத்தில் துளசி தாஸ் இயக்கி வரும் ''கேர்ள்ஸ்'' என்ற படத்திலும் நடிக்கிறேன். இப்படம் தமிழிலும் இனிய நாட்கள் என்ற பெயரில் வௌியாக இருக்கிறது. இது தவிர தமிழில் சில படங்களில் நடிக்க பேசி வருகிறேன்.


இவர் உடன் தான், நடிப்பேன், அவர் உடன் தான் நடிப்பேன் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது. நல்ல கதையம்சம் உடைய படங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். நல்ல கதையும், கேரக்டரும் அமைந்தால் புதுமுகங்களோ அல்லது ஏற்கனவே பீலடில் இருக்கும் ஹீரோக்களோ யாராக இருந்தாலும் அவர்களுடன் நடிப்பேன். அதேசமயம் நான் மாடர்ன் டிரஸில் வந்தாலும் கவர்ச்சிக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுவேன், அது நமக்கு செட்டாகாது, தமிழில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதே என் இலக்கு, இனி சினிமாவில் எனது முழு பயணமும் தொடரும் என்றார் ரேஷ்மா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in