ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

சின்னத்திரை மற்றும் சினிமாவில் ஆக்டிவாக நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாக்கியலெட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்வில் நடந்த சோகமான சம்பவத்தை கூறியுள்ளார். அதில் அவர், ‛‛நான் திருமணமாகி அமெரிக்காவில் இருந்தேன். என் கணவர் பாக்சர் என்பதால் மாத்திரைகள் எடுத்துக்கொள்வார். நான் நான்கரை மாதம் கர்ப்பமாக இருந்த போது என் கணவர் என்னை தாக்கியதில் குழந்தை வெளியே வந்துவிட்டது. அதை பார்த்த என் கணவர் ஓடி விட்டார்.
பிறகு நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கே நான்கரை மாத குழந்தையாக ராகுல் பிறந்தான். ஏற்கனவே என் முதல் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. எனவே, ராகுலை காப்பாற்ற போராடினேன். 9 மாதங்கள் இங்குபேட்டரில் இருந்தான். அவனுக்காக செய்யாத செலவுகள் இல்லை. அதை சமாளிக்க தான் நான் என் பெற்றோருடனேயே வந்து தங்கிவிட்டேன். என்னை போல் வாழ்க்கையில் எதையும் சிரித்துக்கொண்டே தைரியமாக எதிர் கொள்பவர்கள் அனைவரது பின்னாலும் ஒரு சோகக்கதை இருக்கிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாது. அவர்களுக்கு விமர்சிக்க மட்டுமே தெரியும்,'' என்றும் அந்த பேட்டியில் ரேஷ்மா கூறியுள்ளார்.