என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். ஜாய் கிரிசில்டா கருவுற்ற நிலையில், அவரிடம் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் விலகினார். இதையடுத்து, சமூக வலைதளத்தில் ரங்கராஜுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டிருந்தார். அவற்றை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜ் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. 
இந்நிலையில், கர்ப்பிணியாக உள்ள தனக்கு பராமரிப்பு செலவு தொகை கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், 'நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால், ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. எனக்கும், என் வயிற்றில் உள்ள குழந்தைக்கும், ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு செலவு தொகையை, மாதம்பட்டி ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை. மருத்துவம், வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக, மாதம், 6.50 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக ஜாய் கிரிசில்டா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            