எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

வெள்ளித்திரையில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் தற்போது சீரியல்களில் மாமியார், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சீனியர் நடிகைகளான அம்பிகா, நளினி, பூர்ணிமா ஆகியோர் ஒரே தொடரில் ஒன்றாக இணைந்து நடிக்கின்றனர். புதிதாக ஒளிபரப்பாகும் ‛மல்லி' தொடரில் தான் இந்த சீனியர் நடிகைகள் ஒன்றாக சங்கமித்துள்ளனர்.
இதுகுறித்து, அண்மையில் பேட்டியளித்துள்ள அம்பிகா, '1983 காலக்கட்டத்தில் பூர்ணிமாவுடன் மலையாள படத்தில் சேர்ந்து நடித்தேன். அதன்பிறகு 1986ல் நளினியுடன் கன்னட படத்தில் நடித்தேன். தற்போது 40 வருடத்திற்கு பிறகு அவர்களுடன் சேர்ந்து நடிப்பது ஸ்கூல் ரீயூனியன் போல் உள்ளது,' என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.