லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
வெள்ளித்திரையில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் தற்போது சீரியல்களில் மாமியார், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சீனியர் நடிகைகளான அம்பிகா, நளினி, பூர்ணிமா ஆகியோர் ஒரே தொடரில் ஒன்றாக இணைந்து நடிக்கின்றனர். புதிதாக ஒளிபரப்பாகும் ‛மல்லி' தொடரில் தான் இந்த சீனியர் நடிகைகள் ஒன்றாக சங்கமித்துள்ளனர்.
இதுகுறித்து, அண்மையில் பேட்டியளித்துள்ள அம்பிகா, '1983 காலக்கட்டத்தில் பூர்ணிமாவுடன் மலையாள படத்தில் சேர்ந்து நடித்தேன். அதன்பிறகு 1986ல் நளினியுடன் கன்னட படத்தில் நடித்தேன். தற்போது 40 வருடத்திற்கு பிறகு அவர்களுடன் சேர்ந்து நடிப்பது ஸ்கூல் ரீயூனியன் போல் உள்ளது,' என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.