'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

வெள்ளித்திரையில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் தற்போது சீரியல்களில் மாமியார், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சீனியர் நடிகைகளான அம்பிகா, நளினி, பூர்ணிமா ஆகியோர் ஒரே தொடரில் ஒன்றாக இணைந்து நடிக்கின்றனர். புதிதாக ஒளிபரப்பாகும் ‛மல்லி' தொடரில் தான் இந்த சீனியர் நடிகைகள் ஒன்றாக சங்கமித்துள்ளனர்.
இதுகுறித்து, அண்மையில் பேட்டியளித்துள்ள அம்பிகா, '1983 காலக்கட்டத்தில் பூர்ணிமாவுடன் மலையாள படத்தில் சேர்ந்து நடித்தேன். அதன்பிறகு 1986ல் நளினியுடன் கன்னட படத்தில் நடித்தேன். தற்போது 40 வருடத்திற்கு பிறகு அவர்களுடன் சேர்ந்து நடிப்பது ஸ்கூல் ரீயூனியன் போல் உள்ளது,' என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.




