'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி |

சின்னத்திரை மற்றும் சினிமாவில் ஆக்டிவாக நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாக்கியலெட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்வில் நடந்த சோகமான சம்பவத்தை கூறியுள்ளார். அதில் அவர், ‛‛நான் திருமணமாகி அமெரிக்காவில் இருந்தேன். என் கணவர் பாக்சர் என்பதால் மாத்திரைகள் எடுத்துக்கொள்வார். நான் நான்கரை மாதம் கர்ப்பமாக இருந்த போது என் கணவர் என்னை தாக்கியதில் குழந்தை வெளியே வந்துவிட்டது. அதை பார்த்த என் கணவர் ஓடி விட்டார்.
பிறகு நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கே நான்கரை மாத குழந்தையாக ராகுல் பிறந்தான். ஏற்கனவே என் முதல் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. எனவே, ராகுலை காப்பாற்ற போராடினேன். 9 மாதங்கள் இங்குபேட்டரில் இருந்தான். அவனுக்காக செய்யாத செலவுகள் இல்லை. அதை சமாளிக்க தான் நான் என் பெற்றோருடனேயே வந்து தங்கிவிட்டேன். என்னை போல் வாழ்க்கையில் எதையும் சிரித்துக்கொண்டே தைரியமாக எதிர் கொள்பவர்கள் அனைவரது பின்னாலும் ஒரு சோகக்கதை இருக்கிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாது. அவர்களுக்கு விமர்சிக்க மட்டுமே தெரியும்,'' என்றும் அந்த பேட்டியில் ரேஷ்மா கூறியுள்ளார்.