ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் |
சரத்குமார் நடித்த சண்டமாருதம் படத்தை அடுத்து ஏ.வெங்கடேஷ் இயக்கிய படம் ரொம்ப நல்லவன்டா நீ. இந்த படத்தில் மிர்ச்சி செந்தில் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி பாலா உள்பட பலர் நடித்த அப்படத்தில் ரோபோ ஷங்கர் முக்கிய காமெடியனாக நடித்திருந்தார்.
அதற்கு முன்புவரை தனது படங்களில் வேறு காமெடியன்களை பயன்படுத்தி வந்த வெங்கடேஷ், அந்த படத்தில் ரோபோ ஷங்கரை நடிக்க வைத்ததற்கு காரணம். ஒரு டி.வி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வெங்கடேஷ் சென்றிருந்தாராம். அப்போது அவர் முன்பு காமெடி நிகழ்ச்சியில் நடித்துக்காட்டினாராம் ரோபோ ஷங்கர்.
அந்த நிகழ்ச்சி படுகாமெடியாக இருந்ததாம். அதனால் மேடையிலேயே விழுந்து விழுந்து சிரித்து விட்டாராம் ஏ.வெங்கடேஷ். அதனால்தான் அவரை எப்படியேனும் தனது படத்தில் காமெடியனாக நடிக்க வைக்க வேண்டும் என்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த வர், தனது ரொம்ப நல்லவன்டா நீ படத்தில் ஷோலோ காமெடியனாக நடிக்க வைத்தார். இதையடுத்து, தற்போது தனுஷ் நடிக்கும் மாரி உள்பட பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார் ரோபோ ஷங்கர்.
இந்த நிலையில், ஏ.வெங்கடேஷ் மட்டுமின்றி, ரோபோ ஷங்கர் நடிக்கும் மற்ற படங்களின் இயக்குனர்களும், அவரது காமெடி சிறப்பாக இருப்பதாக சொல்லி மற்ற டைரக்டர்களிடமும் அவருக்கு ரெகமண்ட் செய்து வருகின்றனர். இதனால் டைரக்டர்களின் ஆதரவோடு கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வருகிறார் ரோபோ ஷங்கர்.