ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கும்கி நாயகன் விக்ரம்பிரபுவுக்கு அதன்பிறகு நடித்த இவன் வேற மாதிரி படம் எதிர்பார்த்த மாதிரி ஹிட்டாக அமையவில்லை. இருப்பினும் ஓகே என்ற பெயரை எடுத்தது. அதனால் தடுக்கி விழ இருந்த விக்ரம்பிரபு சுதாரித்துக்கொண்டார். அதையடுத்து அவர் நடித்த அரிமா நம்பி, சிகரம்தொடு, வெள்ளைக்கார துரை ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவருக்கு வெற்றிப்படிக்கட்டுகளாக அமைந்தன.
அதனால், தற்போது மிகுந்த சந்தோசத்தில் காணப்படுகிறார் விக்ரம்பிரபு. அதேசமயம் இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலும கவனமாக இருக்கிறார். அதனால் எடுத்தோம் கவுத்தோம் என்று எந்த கதைகளை அவர் ஓ.கே செய்வதில்லை. ஒனறுக்கு மூன்று தடவை கேட்கிறார். முதலில் அப்பா பிரபு கேட்கிறார். அதையடுத்து இவர் கேட்கிறார். பிறகு இருவருமே அமர்ந்து இதில் எந்த கதையை ஓ.கே செய்யலாம் எனறு ஆலோசிக்கிறார்கள். அதன்பிறகுதான் தேர்வு செய்யும் கதையின் டைரக்டரை அழைத்து நடிப்பதற்கான வாக்குறுதியை வழங்குகிறார்கள்.
அந்த வகையில், தற்போது தலப்பாக்கடடு, இது என்ன மாயம் என்ற இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களிலுமே வெள்ளைக்காரதுரை படத்தைப்போலவே காமெடியையும் கலந்து நடிக்கிறாராம் விக்ரம் பிரபு. காரணம், வெள்ளைக்கார துரை ஏ சென்டர்களில் கவுத்து விட்டபோதும், பி அண்ட் சியில்தான் சூடு பிடித்தது. அதனால் இப்போது அவரது டார்க்கெட் பி அண்ட் சி சென்டர் ரசிகர்கள்தானாம். ஆக, மினிமம் கியாரண்டி ரூட்டை கேட்ச் பண்ணி விட்டார் விக்ரம்பிரபு.