ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' |
புதுமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கி வரும் படம் கிடா பூசாரி மகுடி. இந்த படத்தில் புதுமுக நடிகர் தமிழ் நாயகனாக நடித்துள்ளார். இதில் கோயிலுக்கு ஆடு பழி கொடுக்கிற மகுடி என்கிற வேடத்தில் நடிக்கிறாராம் தமிழ். இப்படத்தில் எனக்கு நெகடீவ் ரோல் மாதிரி தெரியும் ஆனா வித்தியாசமான வேடம் என்று கூறும் அவர், என் ராசாவின் மனசுல, பருத்தி வீரன் போன்று இந்த படமும் ஒரு மாறுபட்ட கிராமத்து கதையில் உருவாகியிருக்கிறது என்கிறார்.
இப்படத்தில் நடிக்க வந்தது பற்றி தமிழ் கூறும்போது, இன்ஜினியரிங் படித்து விட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்த என்னை நடிக்க அழைத்தபோது, ஹீரோ ஆவதற்கு அழகு வேணும் அது எங்கிட்ட இல்லை. என்னை விட்டுடுங்க என்றேன். ஆனால் டைரக்டர் ஜெயகுமார், ஹீரோ ஆவதற்கு அழகு தேவையில்லை திறமைதான் தேவை என்றார். அதன்பிறகு எனக்கு நடிக்க இன்ட்ரஸட் இல்லை என்றேன். ஆனால் அவர் ஒரு மாதமாக மீனை வலை போட்டு தேடுறது மாதிரி என்னை தேடிக்கிட்டே இருந்தார். அதன்பிறகுதான் சரி நடிக்கலாம்ன்னு வந்தேன்.
பின்னர், முதல் நாள் ஷூட்டிங் போனோம். போன இடத்துலதான் சினிமாவுக்கு இவ்ளோ மவுசு இருக்குதான்னு எனக்கு தெரிஞ்சுது. நான் ஒரு பீர் பாட்டில குடிச்சிட்டு வச்சா அத வந்து ஒருத்தன் நாக்கால் டேஸ்ட் பார்க்கிறான். இன்னொருத்தன் டீசர்ட்ட கழற்றி அதுல ஆட்டோகிராப் கேட்கிறான். ஒரு கடையில பொருள் வாங்கிட்டு பணம் கொடுத்தேன். அதைப்பார்த்த இன்னொரு பையன், இன்னொரு பணத்தை கடைக்காரர்கிட்ட கொடுத்துட்டு ஹீரோ கொடுத்த பணத்தை எனக்கு கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டுப்போறான். இத்தனைக்கும் நான் புதுமுக நடிகர்.
அதைப்பார்த்து எனக்கு புல்லரிச்சுப்போச்சு. சினிமா நடிகருக்கு மக்கள் மத்தியில இருக்கிற கிரேஸ் அப்பத்தான் எனக்கு புரிஞ்சுது என்று கூறும் நடிகர் தமிழ், கிடா பூசாரி மகுடி படத்தோடு டப்பிங் வேலைகள் போய்க்கிட்டிருக்கு. பொங்கல் படங்கள் ரிலீசானதும் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது என்கிறார்.