ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
புனேயை சேர்ந்த சீத்தல் பவா என்ற 17 வயது இளம் பெண் கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புற்று நோயின் கடைசி கட்டத்தை எட்டிவிட்ட அவர் தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் வீட்டில் தன் கடைசி நாட்களை சந்தோஷத்துடன் கழித்து வருகிறார். அவருக்கு நடிகை ஸ்ருதி ஹாசனை சந்திக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதனை மேக் அவிஷ் என்ற அமைப்பு ஸ்ருதி ஹாசனுக்கு தெரியப்படுத்தியது.
ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதி. மும்பையில் ஒரு இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத் தயாரிப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி வாங்கிக் கொண்டு புனே பறந்தார். அங்கு அவர் சீத்தல் பவாவை சந்தித்ததோடு அவருடன் ஒரு நாள் செலவிட்டார்.
அவருடன் சாப்பிடுவது, விளையாடுவது, பேசிக்கொண்டிருப்பது என்று பொழுதை கழித்தார். மரணத்தை தெரிந்து கொண்ட பிறகும் அதனை துணிச்சலுடனும், மகிழ்ச்சியுடனும் எதிர்கொள்ளும் அந்த பெண்ணின் துணிச்சலை பார்த்து வியந்த ஸ்ருதி. அவரைப் புகழ்ந்து ஒரு கடிதம் எழுதி அவரிடமே கொடுத்து விட்டு திரும்பினார். அந்த கடிதத்தை தினமும் படித்தபடியே தன் இறுதி நாளை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கிறார் சீத்தல்பவா.