ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஆரம்பத்தில் வருடம் ஒரு படம் என்று இயக்கி வந்த மணிரத்னம், பின்னர் மெகா படங்களை இயக்கத் தொடங்கியபோது ஒரு படத்திற்கு இரண்டு ஆண்டுகள்கூட எடுத்துக்கொண்டார். பின்னர், ஆயுத எழுத்து படத்திற்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு குரு படத்தை வெளியிட்டவர், அதையடுத்து 3 ஆண்டுகள் கழித்து அதாவது 2010ல் ராவணன் படத்தை இயக்கினார்.
அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து 2013ல் கடல் படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் அப்படி அவர் காலஅவகாசம் எடுத்துக்கொண்டபோதும் இந்த படங்களெல்லாமே மணிரத்னத்திற்கு தோல்வியாகத்தான் அமைந்தன. அதனால்தான் தற்போது அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சில முன்னணி நடிகர்கள்கூட பின்வாங்கி விட்டனர்.
இந்த நிலையில, தற்போது புதிய படத்தை துல்கர்சல்மானை நாயகனாக வைத்து வருகிற 6-ந்தேதியில் இருந்து படப்பிடிப்பு நடத்துகிறார் மணிரத்னம். இப்படத்தில் நாயகியாக முதலில் ஸ்ருதிஹாசன், அலியாபட் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. பின்னர் நித்யாமேனன் நடிப்பதாக சொன்னார்கள். இப்போது பூ, மரியான் படங்களில் நடித்த பார்வதி மேனன் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால் மணிரத்னம் தரப்பில் இருந்து துல்கர்சல்மானின் பெயர் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கதாநாயகி பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.