நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு |
தமிழில் ரா ரா, சந்தமாமா படங்களில் நடித்த சுவேதா பாசு, ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். குற்றத்தை ஒப்புகொண்டதாலும், முதல் குற்றம் என்பதாலும் அவர் 6 மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் தங்கி இருக்க வேண்டும் என்றும், அங்கு அவருக்கு மனநல பயிற்சியும், கவுன்சிலிங்கும் கொடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி சுவேதா பாசு மகளிர் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். இதனை எதிர்த்து சுவேதா பாசுவின் தாயார் கோர்டில் மனுதாக்கல் செய்தார்... "என் மகளை நாங்கள் நன்றாக பார்த்து கொள்கிறோம் அவள் விருப்பத்துக்கு மாறாக அவளை மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைத்திருப்பது அவளது அடிப்படை உரிமையை பறிப்பதாகும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் 6 மாதம் மறுவாழ்வு இல்லத்திலிருந்து மறுவாழ்வுக்கான ஆலோசனைகளை பெற வேண்டும். எனவே அவரை விடுவிக்க முடியாது என்ற கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இதைத் தொடர்ந்து செசன்ஸ் கோர்ட்டில் முறையிட முடிவு செய்துள்ளனர்