பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இயக்குனர் ஜெயம்ராஜா, 'வேலாயுதம்' படத்திற்கு பிறகு சொந்த கதையை படமாக எடுத்து வருகிறார். இதில் ஹீரோவாக அவரது தம்பி ஜெயம் ரவி நடிக்கிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் 40 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. படத்தில் ஒரு பவர்புல் வில்லன் கேரக்டர் வருகிறது. இதற்கு சரியான வில்லனைத் தேடி வருகிறார் ராஜா.
வில்லன் என்றால் கோட்டாச சீனிவாசராவ், நாசர் மாதிரி வழக்கமான வில்லன்கள் இல்லையாம். இன்றைக்கு டாப்பில் இருக்கும் ஒரு ஹீரோவையே வில்லனாக்க முயற்சித்து வருகிறாரம். ஜெயம் ரவிக்கு வில்லான நடிக்க அவரது நெருங்கிய நண்பர்களான விஷால், ஜீவா, சிம்பு, ஆர்யா, ஆகியோரிடம் இதுகுறித்து பேச்சு நடத்தியிருக்கிறார் ராஜா. கதையை கேட்ட எல்லோருக்கும் கதை பிடித்திருந்தாலும் வில்லனாக நடித்தால் இமேஜ் மாறிவிடுமோ என்கிற தயக்கம் இருக்கிறதாம். இருந்தாலும் ஆர்யா மட்டும் பாசிட்டிவான பதிலை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் பெரிய ஹீரோ வில்லனாக நடிக்கும் விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்று ராஜா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.