பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. அதையடுத்து, ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் பென்சில், அதர்வா நடிக்கும் ஈட்டி மற்றும் நகர்ப்புறம் ஆகிய படங்களில் நடித்து வந்த அவரை, விஷ்ணுவைக்கொண்டு தான் இயக்கும் ஜீவா படத்தில் நடிப்பதற்கும் கமிட் பண்ணினார் சுசீந்திரன்.
பாண்டியநாடு மெகா ஹிட்டுக்குப்பிறகு சுசீந்திரன் இயக்கும் படம் என்பதால், இந்த படத்திற்கு பிறகு தனது பெயரும் கோலிவுட் மார்க்கெட்டில் எகிறி விடும் என்ற பெருத்த நம்பிக்கையில் அடுத்தபடியாக வந்த இன்னொரு படவாய்ப்பைகூட நிராகரித்து விட்டு சுசீந்திரன் கேட்ட தேதிகளை கொடுத்து முதல்வேளையாக அட்வான்சை கைப்பற்றினார் ஸ்ரீதிவ்யா.
ஆனால், படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்தபோது திடீரென இன்னொரு கதாநாயகியாக ஒருவர் மீது இருவர் சாய்ந்து, பனிவிழும் மலர்வனம் ஆகிய படங்களில் நடித்த சானியாவையும் களத்தில் இறக்கி விட்டாராம் சுசீந்திரன். இதனால் பலத்த அதிர்ச்சிக்கு ஆளானாராம் ஸ்ரீதிவ்யா. தன்னிடம் சிங்கிள் ஹீரோயின்தான் என்று கதை சொல்லிவிட்டு, இப்போது இன்னொரு நடிகையையும் இறக்கி விட்டு தன்னை ஏமாற்றி விட்டாரே என்று உள்ளூர வருந்திக்கொண்டிருந்தாராம்.
அவரிடம் இந்த திடீர் மாற்றத்தை எப்படியோ கண்டுபிடித்து விட்ட சுசீந்திரன், ஒருநாள் அவரை அழைத்து, படத்தில் நீ மட்டும்தான் கதாநாயகி அதில் எந்த மாற்றமும இல்லை. இந்த சானியா கதைக்குள் வரும் ஒரு சிறிய கேரக்டர்தான். சில சீன்கள் மட்டும் அவர் வருகிறார். அதனால் அவர் நடிப்பதால் உனது கதாநாயகி வேடத்துக்கு எந்தவித பங்கமும் ஏற்படாது என்று சொன்னாராம். அதையடுத்தே, அதிர்ச்சியில் இருந்து மீண்டு சகஜநிலைக்கு திரும்பினாராம் ஸ்ரீதிவ்யா.