நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் |
ரஜினியின் சினிமா வரலாற்றில் முதன்முறையாக 100 கோடிக்கு மேல் உருவாகியுள்ள படம் கோச்சடையான். அதுவும் இந்திய அளவில் முதன்முறையாக மோஷன் கேப்சர் 3டி தொழில் நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது. அந்த வகையில் இந்த டெக்னாலஜியில் நடித்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரஜினி.
ஏப்ரல் 11-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தை தமிழ், தெலுங்கு. இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, மராட்டி என 6 மொழிகளில் தயாரித்துள்ளனர். மேலும், ஜப்பானில் ரஜினி படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால் ஜப்பான் மொழியிலும் டப்பாகும் கோச்சடையான், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் அடுத்து டப்பாக உள்ளதாம்.
இந்நிலையில், மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் இந்தியாவில் தயாரான முதல் படம் என்பதால் இப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடவும் திட்டமிட்டுள்ளார்களாம். ஆக, மிக விரைவில் கோச்சடையான் உலக அரங்கில் பேசப்படும் தகுதியை பெறப்போகிறது.