நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
இன்றைய இளம் நடிகைகள் எல்லோரும் குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசினார். விஷால் நடித்து, தயாரித்துள்ள பாண்டியநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய கேயார், இப்போது இருக்கும் இளம் நடிகைகள் யாரும் தங்களது பட புரொமஷன்களுக்கு கூட வருவதில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதோ இங்கு இருக்கும் குஷ்புவை பற்றி நான் சொல்லியாக வேண்டும். நான் அவரை ஹீரோயினாக வைத்து 6 படங்கள் தயாரித்துள்ளேன். அவர் ஒரு படத்தின் புரொமஷன்களுக்கு கூட வராமல் இருந்தது கிடையாது. அதேமாதிரி அவர் நடிக்கிற படமாக இருந்தாலும் சரி, இல்லாத படமாக இருந்தாலும் சரி,விழா என்று அழைத்தால் உடனே வந்துவிடுவார். அதான் குஷ்பு. இன்றைய புதுநடிகைகள் எல்லாம் அவரைப்பார்த்து அந்த ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.