‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் |
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கல்வி பணியை பாராட்டி நடிகர் அர்ஜுன் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பாரத நாட்டில் எந்த மாநில அரசும் செய்யாத ஒரு பெரிய சாதனை, முதல்வர் நிகழ்த்தியுள்ள கல்வி சாதனை. ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் தடையில்லாமல் கல்வி பயில மாணவர்களுக்கு கட்டணம் இல்லா கல்வி, ஊக்கத்தொகை, மடிக்கணினி, மிதிவண்டி, நான்கு இணைச்சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள், புத்தகப்பை, கிரேயான்ஸ், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, மதிய உணவு, காலணிகள், இலவசப் பேருந்து பயண அட்டை, தங்கிப் பயில விடுதிகள், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்பறைகளுக்கு வரைபடம்.
இதற்காக 11 கோடியே 56 லட்சத்து 32 ஆயிரத்து 600 செலவிட அனுமதி அளித்து, ஒவ்வொரு பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறையை அறிமுகப்படுத்தி அறிவியல் சாதனங்கள் வாங்கிட 5 கோடியே 5லட்சம் நிதி ஒப்புதல் அளித்து கல்வித் தாயாக திகழும் தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு ஏழை எளிய மாணவர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அர்ஜுன் கூறியுள்ளார். இதே அறிக்கையை சில பத்திரிகைகளில் விளம்பரமாகவும் கொடுத்துள்ளார். அர்ஜுனின் இந்த திடீர் அறிக்கையின் காரணம் தெரியாமல் மற்ற நடிகர்கள் தவிக்கிறார்கள். அர்ஜுன் கட்டிவரும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அரசின் சில உதவிகளை எதிர்பார்ப்பதாகவும், கும்பாபிஷேகத்துக்கு முதல்வரை அழைக்க இருப்பதாலும் இப்போது இந்த அறிக்கையை அர்ஜுன் வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.