நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் பழைய திரைப்படப் பாடல்களை தங்களது படங்களில் சில இயக்குனர்களில் பயன்படுத்தி புதிய டிரென்ட் ஒன்றை உருவாக்கினார்கள். அவை படத்திற்கு பக்கபலமாகவும் அமைந்ததால் பலரும் அதைத் தொடர்ந்தார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், அஜித், த்ரிஷா நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் இசையில் வந்த 'இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன், எஞ்சோடி மஞ்சக்குருவி' ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
தன்னிடம் முறையான அனுமதி பெறாமல் இப்பாடல்களைப் பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
இதனிடையே, ஓடிடி தளத்தில் இடம் பெற்றுள்ள 'குட் பேட் அக்லி' படத்தில் இன்னும் அந்தப் பாடல்கள் நீக்கப்படவில்லை, அப்படியே இருக்கின்றன. அந்தப் பாடல்கள்தான் படத்தின் சிறப்பம்சமாக இருந்தது. தற்போது அந்தப் பாடல்கள் இல்லையென்றால் படத்தைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது.




