தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சந்தானம் நடித்த 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் இறுதி காட்சியில் சந்தானம் கானா பாடல் பாடும் போது அப்பாடலில் வந்து நடனம் ஆடியவர் தேஜு அஸ்வினி. தமிழில் 'கல்யாண சமையல் சாதம் ' என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான 'அஸ்க்குமாரோ' வீடியோவில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர், 'என்ன சொல்லபோகிறாய்' படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் கால்பதித்தார். தற்போது மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 12ல் படம் ரிலீசாகிறது.
இந்த நிலையில் தேஜூ அஸ்வினி அளித்த பேட்டி: எதிர்பாராத விதமாகத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். சினிமா விளம்பரம் சார்ந்த ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து கொண்டிருந்தபோது, ஒரு குறும்படம் நடித்தேன். பின்னர் மாடலிங் செய்து வந்தேன். அதன்பின்னர் சினிமாவுக்கு வந்தேன்.
பொருளாதார சூழலும், என் கனவும் சேர்ந்தது தான் சினிமா பயணம். என் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது இந்த சினிமாதான். அப்படிப்பட்ட சினிமாவுக்கு என்றும் உண்மையாக இருப்பேன். பல படங்கள் நடித்த பிரபலங்களுக்கு கூட கிடைக்காத ரசிகர்களும், ஆதரவாளர்களும் எனக்கு கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம். அதனை கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக பார்க்கிறேன். காதல் படங்கள் போல ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன். காலமே எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும். இவ்வாறு அவர் கூறினார்.