சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‛உப்பு கப்புறம்பு' படம் கடந்த ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்தது. சமீபத்தில் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்பட அனுபவம் குறித்த பேட்டியளித்த கீர்த்தி சுரேஷ், ‛‛இந்தப் படத்தின் படப்பிடிப்பு வீட்டில் இருப்பது போல் நிதானமாக, பொறுமையாக நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், இன்னும் கொஞ்ச நாட்கள் படப்பிடிப்பு இருந்திருக்கலாம் என வருந்தினேன்.
இந்தத் திரைப்படம் நகைச்சுவையைப் பயன்படுத்தி ஒரு தீவிரமான விஷயத்தை முன்னிலைப்படுத்துகிறது. எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம் என்றில்லை. சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன். அப்படி ஆகிவிட்டால் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக்கொண்டு தனியாக ட்ரைவ் செய்வேன், அப்போது நல்ல மியூசிக் கேட்பேன். அதுமட்டுமின்றி, வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். என்ன அப்செட் வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் போதும் அவை அனைத்தும் காணாமல் போய்விடும்'' என்றார்.




