முதன்முறையாக மலையாள படத்திற்கு இசையமைத்துள்ள சங்கர், எஷான், லாய் | 'மாநாடு' படத்தில் நடிக்க மறுத்தேன் ; சிவகார்த்திகேயன் சொன்ன புது தகவல் | மூன்று வருடங்களுக்குப் பிறகு 'ஆசை'யுடன் வெள்ளித்திரைக்கு திரும்பும் கதிர் | கார் பயணத்தின் போது 20 வருடங்களாக இந்த இரண்டு விஷயங்களை கவனமாக தவிர்க்கும் விவேக் ஓபராய் | 'யாக்கைத் திரி, காதல் சுடர்', பாடலுடன் வீடியோ பதிவிட்ட மிருணாள் தாகூர் !! | விமர்சனங்களை மீறி வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற நயன்தாரா | தோழியின் பிடியிலிருந்து கணவரை மீட்க பாடுபடும் நடிகை | சங்கே முழங்கு, தனி ஒருவன், தலைவன் தலைவி - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் பட சாயலில் வெளிவந்த நடிகர் ரவிச்சந்திரனின் திரைப்படம் | நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் |

தனுஷ் நடித்த ‛மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதன்பின்னர், ‛ஒரு கல் ஒரு கண்ணடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யனும் குமாரு, சேட்டை, வேலாயுதம், வாலு' என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா, 2022ம் ஆண்டு டிசம்பரில் தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஹன்சிகாவின் திருமண செய்தி வெளியானதுமே, சோஹேல் பற்றி இணையத்தில் பல செய்திகள் வெளி வந்தன. தொழிலதிபரான சோஹேல் கதூரியா, ஹன்சிகாவின் தோழியின் கணவர் என்றும், தோழியை விவாகரத்து செய்துவிட்டுத்தான், ஹன்சிகா மோத்வானிவை திருமணம் செய்து கொள்கிறார் என்றும் இணையத்தில் செய்தி பரவியது. சோஹேல் கதூரியாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய ஹன்சிகாதான் முக்கிய காரணம் என்றும் தகவல் வெளியானது.
இது பற்றி பேசி ஹன்சிகா, ‛‛தோழியின் கணவரை அபகரித்துக் கொண்டதாக செய்திகள் வெளியானதை பார்த்து நான் மிகவும் உடைந்து விட்டேன். அது உண்மை இல்லை, இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள், அது தான் உண்மை'' என கண்ணீர்மல்க பேசி இருந்தார்.
திருமணத்திற்கு பிறகும் படத்தில் நடித்து வந்தார் ஹன்சிகா. இந்நிலையில், ஹன்சிகா, தனது காதல் கணவரை பிரிந்து அம்மாவுடன் வாழ்த்து வருவதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அப்போதிருந்தே, இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இருவர் தரப்பிலும் இதுக்குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.




