பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்” | 2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! |

நடிகர் கமல்ஹாசன் அடுத்து சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கத்தில் அவரது 237வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. கடந்த பல மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த படத்திற்கான கதாநாயகி தேடும் பணியில் உள்ளனர். முதற்கட்டமாக நடிகை சாய் பல்லவியை அணுகியுள்ளனர். அவர் ஹிந்தியில் உருவாகிவரும் ‛ராமாயணா' படத்திற்கு அதிகளவில் கால்ஷீட் தந்துள்ளதால் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றார்.
இதையடுத்து இளம் நடிகை ருக்மணி வசந்த் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நடித்து வருவதால் அவருக்கு கால்ஷீட் பிரச்னை உள்ளதாக கூறி மறுத்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் தவறவிட்ட வாய்ப்பு தற்போது மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனிடம் சென்றுள்ளது. அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




