யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் | வாடிவாசல் : வெற்றிமாறன் பேச்சிலும் குழப்பம் | சிம்புவின் அடுத்தபடம் : வெளியான உறுதியான தகவல் | கவர்ச்சி காட்டாமல் ஜெயித்த நிமிஷா | நடிச்சா ஹீரோ தான்... 3 படங்கள் ஹிட் : பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி |
பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‛டிராகன்' படம் சூப்பர் ஹிட்டானது. 150 கோடிக்கு மேல் வசூலித்து இந்தாண்டில் அதிக லாபம் தந்த படமாக அமைந்தது. இந்த படத்தின் 100வது நாள் விழா சென்னையில் நடந்தது.
விழாவில் பேசிய ஹீரோ பிரதீப் ரங்கநாதன் ''எனக்கும், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துக்கும் இடையே பல ஆண்டுகள் பழக்கம். அவர் ஓ மை கடவுளே படம் இயக்கும்போது சின்ன ரோல் தர்றேன்னு சொன்னார். ஆனால், நான் காதல் படத்துல ஒரு கேரக்டர் பேசுறது மாதிரி ''அமெரிக்க மாப்பிள்ளை, வில்லன் ரோல் பண்ண மாட்டேன். நடித்தால் ஹீரோவாகதான் நடிப்பேன்னு சொன்னேன். அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். நான் இயக்கிய கோமாளி ஹிட்டானது. அடுத்து நான் நடித்து இயக்கிய லவ் டுடே ஹிட் ஆக, நானும், அவரும் இணைந்து டிராகன் பண்ணினோம். இந்த படமும் ஹிட். ஒருவகையில் நான் பங்குபெற்ற கோமாளி, லவ்டுடே, டிராகன் படங்கள் 100வது நாளை கொண்டாடி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி உடன் இந்த படக்குழுவுக்கும், எனக்குமான உறவு முடிவடைகிறது. அடுத்து ஏதாவது விருது வழங்கும் விழாவில் நாங்கள் சந்திக்கலாம்' என்றார்.
மேடையில் பிரதீப் ரங்கநாதன் தோற்றத்தை பேச்சை பார்த்தவர்கள் அப்படியே தனுஷ் மாதிரியே மாறுகிறார் என்று கமென்ட் அடித்தனர். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐகே, கீர்த்திவாசன் இயக்கும் டியூட் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
நானும் ரவுடிதான் படத்தின் மூலம் தனுஷால் பிரபலமாக்கப்பட்டவர் விக்னேஷ் சிவன். அந்த படத்தில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இப்போது தனுஷ் போட்டியாளர் என கருதப்படும் பிரதீப் ரங்கநாதன் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருவதால், அதற்கு பின்னால் பல கணக்குகள் சொல்லப்படுகின்றன.