ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் 'சலார்' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது, ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் 'டிராகன்' படத்தை இயக்கி வருகிறார். ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வரும் பிப்ரவரியில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக டிராகன் படக்குழுவினர் ஜோர்டன் நாட்டுக்கு பயணிக்க இருக்கின்றனர். இங்கே மொத்தம் அதிரடியான மூன்று சண்டை காட்சிகளை அவர்கள் படமாக்க திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட பிப்ரவரி மாதம் முழுவதும் அங்கே படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.