ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
1978ம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த படம் 'படுவாரல்லி பாண்டவரு'. இந்த படத்தை புட்டண்ணா கனகல் இயக்கி இருந்தார். அம்ரீஸ், ராமகிருஷ்ணா, ஜெய் ஜெகதீஷ், ஆரத்தி, சுபா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மகாபாரத கதாபாத்திரங்களான 5 பஞ்சபாண்டவர்களின் குணாதிசயங்களை பெற்ற 5 சகோதரர்களின் சமூக கதை. ஒரு பெரிய பண்ணையாரை எதிர்த்து இவர்கள் எப்படி போராடி பெற்றி பெறுகிறார்கள் என்பது திரைக்கதை. இந்த படம் கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் 'மனவூரி பாண்டவலு' என்ற பெயரில் ரீமேக் ஆனது. பாபு இயக்கினார், கிருஷ்ணன் ராஜூ, சிரஞ்சீவி, முரளி மோகன், ஷோபா, கீதா உள்ளிட்டோர் நடித்தனர். அங்கும் படம் வெற்றி பெற்றது. ஹம் பாஞ்ச் என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்றது.
இதே படம் தமிழில் 'பண்ணைபுரத்து பாண்டவர்கள்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதனை எடிட்டர் பி.லெனின் இயக்கினார். ஜெயசாரதி மூவீஸ் சார்பில் நடிகர் ஜெயச்சந்திரன் தயாரித்து, நடித்தார். அவருடன் சரத்பாபு, சரிதா, கீதா, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீகாந்த், சுருளிராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெற்றி பெறவில்லை. காரணம் மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் நடித்திருந்ததும், தமிழ் முன்னணி நடிகர்கள் நடிக்கவில்லை என்றும், ஆக்ஷன் கதையை காமெடி கதையாக மாற்றியதும் தோல்விக்கு என்று காரணம் கூறப்பட்டது. பின்னாளில் இந்த கதையை இன்ஸ்பிரேஷனாக கொண்டுதான் அஜித் நடித்த 'வீரம்' படத்தை சிவா இயக்கினார்.