தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் |

பல கதைகள் கொண்ட படத்தை 'ஆந்தாலஜி' வகை என்று அழைப்பார்கள். ஆனால் ஆந்தாலஜி என்ற சொல் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பே அத்தகைய படங்கள் வெளிவந்திருக்கிறது. குறிப்பாக 1950ம் ஆண்டு வெளியான படம் 'பாரிஜாதம்'.
இதில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா, பி.எஸ்.சரோஜா, ஆர்.பாலசுப்ரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், நாகர்கோவில் கே.மகாதேவன், புலிமூட்டை' ராமசுவாமி, டி.எஸ்.ஜெயா, மேனகா, காக்கா' ராதாகிருஷ்ணன், சி.எஸ்.டி.சிங், டி.மினிலி.சி.தஹோவ் உள்பட பலர் நடித்திருந்தனர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். இளங்கோ வசனங்களை எழுதினார், சி.ஆர்.சுப்பாராமன் இசை அமைத்தார்.
இந்த படத்தில் 3 கதைகள் இடம் பெற்றிருந்தது. அழிக்கவே முடியாத நரகாசுரனை அழித்து தீபாவளி வந்த கதை, கிருஷ்ணரின் மனைவிளான பாமா, ருக்மணிக்கு இடையிலான ஈகோ மோதல் கதை என இரண்டு புராண கதைகள் இடம்பெற்றது.
இது தவிர தனி டிராக்காக என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்த காமெடி கதை இடம்பெற்றது. முதல் இரண்டு கதைகளிலும் வரும் புராண கதாபாத்திரங்களை கிண்டல் செய்யும் விதமாக இந்த கதை இடம்பெற்றது. அதோடு அன்றைக்கு இருந்த மூட நம்பிக்கைகளையும் இந்த படம் சாடியது. என்றாலும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.