மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
பல கதைகள் கொண்ட படத்தை 'ஆந்தாலஜி' வகை என்று அழைப்பார்கள். ஆனால் ஆந்தாலஜி என்ற சொல் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பே அத்தகைய படங்கள் வெளிவந்திருக்கிறது. குறிப்பாக 1950ம் ஆண்டு வெளியான படம் 'பாரிஜாதம்'.
இதில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா, பி.எஸ்.சரோஜா, ஆர்.பாலசுப்ரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், நாகர்கோவில் கே.மகாதேவன், புலிமூட்டை' ராமசுவாமி, டி.எஸ்.ஜெயா, மேனகா, காக்கா' ராதாகிருஷ்ணன், சி.எஸ்.டி.சிங், டி.மினிலி.சி.தஹோவ் உள்பட பலர் நடித்திருந்தனர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். இளங்கோ வசனங்களை எழுதினார், சி.ஆர்.சுப்பாராமன் இசை அமைத்தார்.
இந்த படத்தில் 3 கதைகள் இடம் பெற்றிருந்தது. அழிக்கவே முடியாத நரகாசுரனை அழித்து தீபாவளி வந்த கதை, கிருஷ்ணரின் மனைவிளான பாமா, ருக்மணிக்கு இடையிலான ஈகோ மோதல் கதை என இரண்டு புராண கதைகள் இடம்பெற்றது.
இது தவிர தனி டிராக்காக என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்த காமெடி கதை இடம்பெற்றது. முதல் இரண்டு கதைகளிலும் வரும் புராண கதாபாத்திரங்களை கிண்டல் செய்யும் விதமாக இந்த கதை இடம்பெற்றது. அதோடு அன்றைக்கு இருந்த மூட நம்பிக்கைகளையும் இந்த படம் சாடியது. என்றாலும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.