பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் மறைந்த விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருவரும் 80களில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். கிராமப்புறங்களில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள் இருக்கிறதோ இல்லையோ விஜயகாந்த் ரசிகர் மன்றம் கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை அந்தக் காலத்தில் இருந்தது.
வழக்கம் போல அவரது வாரிசும் சினிமாவில் நடிக்க வந்தார். அவரது இரண்டாவது மகனான சண்முகப்பாண்டியன் 2015ல் வெளிவந்த 'சகாப்தம்' படம் மூலம் கதாநாகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அடுத்து மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு 'மதுர வீரன்' படத்தில் நடித்தார். அதுவும் பெரிதாகப் பேசப்படவில்லை. மூன்றாவது படமாக அவர் நடித்துள்ள 'படை தலைவன்' படம் நாளை வெளியாக உள்ளது.
இந்தப் படத்திலும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகத்தான் நடித்துள்ளார். விஜயகாந்த் ரசிகர்கள் வந்து பார்த்தாலே படம் வெற்றிப் படமாக அமைந்துவிடும். படம் நன்றாக இருந்தால் மற்ற ரசிகர்களும் வந்து படம் பார்ப்பார்கள். கடந்த பத்து வருடங்களில் மூன்றே படங்களில் நடித்துள்ள சண்முகப்பாண்டியன் இந்த 'படை தலைவன்' படம் மூலம் வெற்றியைப் பதிவு செய்வாரா என திரையுலகினரும் எதிர்பார்த்துள்ளார்கள்.
இந்தப் படத்துடன் நாளைய வெளியீடாக 'கட்ஸ், ஹோலோகாஸ்ட்' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களும் வெளியாக உள்ளன.