தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்த படை தலைவன் படம் இன்றைக்கு ரிலீஸ் ஆகி உள்ளது. முன்னதாக, சென்னையில் நேற்று மாலை தங்களுக்கு நெருக்கமான சினிமாக்காரர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த படத்தின் பிரிமியர் ஷோ நடத்தினர் விஜயகாந்த் குடும்பத்தினர். இதில் விஜயகாந்த மனைவி பிரேமலதா, மூத்த மகன் விஜய பிரபாகரன், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், நடிகர்கள் ராதாரவி, சரத்குமார், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், நடிகை அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் ஏஐ., மூலம் உருவாக்கப்பட்ட விஜயகாந்த் கவுரவ வேடத்தில் வருகிறார் என்று கூறப்படுகிறது. நேற்று நடந்த சிறப்பு காட்சியில் விஜயகாந்த் வரும் சீன்களில் கைதட்டல், விசில் பறந்து இருக்கிறது. விஜயகாந்த் நடித்த பொட்டு வைத்த தங்ககுடம் பாடலும் இந்த படத்தில் இடம் பெறுகிறது. படை தலைவன் படத்துக்கும் இசையமைத்தவர் இளையராஜா தான். ஒரு யானைக்கும், ஹீரோவுக்குமான பாசமே படைதலைவன் என்று கூறப்படுகிறது.